நிவர் புயலால் புதுச்சேரியில் ரூ. 400 கோடி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் நேற்று இரவு புதுச்சேரியில் கரையைக் கடந்தது. அந்த புயல் கரையைக் கடக்கும் போது 120 முதல் 155 கி.மீ. வரை காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் புதுச்சேரியில் பல இடங்களில் ஏற்பட்ட சேதத்தின் மொத்த மதிப்பு ரூ. 400 கோடி என முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும், முதற்கட்டமாக மத்திய அரசிடம் ரூ. 50 கோடி நிவாரணம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார்.