ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வியாழக்கிழமை மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிகாரின் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கடந்த ஆகஸ்ட் மாதம் உடல்நலக் குறைவால் ராஞ்சி மருத்துவ நிறுவனத்தில்(ரிம்ஸ்) அனுமதிக்கப்பட்டார்.
பின், ராஞ்சி மருத்துவ நிறுவன இயக்குநரின் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வந்த லாலு வியாழக்கிழமை மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.