உலகளவில் புதுப்பிக்கத்தக்க மின் திறனில் இந்தியா 4வது இடத்தில் உள்ளதாக வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
3 வது உலகளாவிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டுக் கூட்டத்தின் துவக்க விழாவில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.
அதில், மோடி பேசுகையில்,
தற்போது உலகளவில் புதுப்பிக்கத்தக்க மின் திறனில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. அனைத்து முக்கிய நாடுகளிலும் புதுப்பிக்கத்தக்க மின் திறன் மிக வேகமாக வளர்ந்து வருகின்றது.
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் தற்போது 136 கிகா வாட்ஸ் ஆகும், இது நமது மொத்த மின் திறனில் 36 சதவீதமாகும்.” என தெரிவித்தார்.