இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நாளை(நவ.27) இலங்கை செல்வதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்தியில்,
“இலங்கை பாதுகாப்பு அமைச்சக செயலர் ஜெனரல். கமல் குணரத்ன அழைப்பின் பேரில் முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நவம்பர் 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாள்கள் இலங்கை செல்கிறார்.” என தெரிவித்துள்ளது.