தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 15 மாவட்டங்களில் புதன்கிழமை அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் இன்று இரவு கரையைக் கடக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும்.
மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.