புதுச்சேரி: புதுவையில் பள்ளிகளுக்கு வரும் சனிக்கிழமை வரை மேலும் 2 நாள்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் அ. மைக்கெல் பெனோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நிவர் புயல் தாக்கம் மற்றும் கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை (நவ. 26) முதல் சனிக்கிழமை (நவ. 28) வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.