நாட்டில் பல மாநிலங்களில் கரோனா 2ம் அலை ஏற்பட்டிருக்கும் சூழலில் பிரதமர் மோடி நாளை(செவ்வாய்க்கிழமை) மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
பண்டிகை காலத்தில் மக்கள் அதிகளவு பொது இடங்களில் கூடியதால் கேரளம், குஜராத், மத்திய பிரதேசம், தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து உள்ளன.
இதையடுத்து மாநிலங்களின் கரோனா நிலவரம் குறித்து செவ்வாய்க்கிழமை முதல்வர்களுடம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.