சென்னை: கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடியும் திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரனிஜிகாந்த் டிவிட்டர் பக்க பதிவில் வெளியிட்டுள்ள கருத்தில், கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடியும் திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள் என கூறியுள்ளார்.