தற்போதைய செய்திகள்

கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் தமிழகத்தில் 6  பேர் அனுமதி 

2nd Feb 2020 03:35 PM

ADVERTISEMENT


சீனாவிலிருந்து இந்தியா திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த 5 பேரும், சீனர் ஒருவர் என 6 பேர் கரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

சீனாவில் பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு அறிகுறிகளுடன் 14,000 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  

சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. ‘சாா்ஸ்’ வைரஸின் 70 சதவீதத் தன்மையைக் கொண்ட அந்த வைரஸ் ‘கரோனா’ வகையைச் சோ்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

இந்த புதிய ‘கரோனா’ வைரஸ் தனது தன்மையையும், வடிவத்தையையும் தாமாகவே மாற்றிக் கொண்டு இன்னும் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது. இந்த வைரஸ் நோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில், தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி கூறியதாவது: தமிழகத்தில் கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், சீனாவில் இருந்து வந்த சீனர் ஒருவர் என 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களில் திருவண்ணாமலை, திருச்சி. ராமநாபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் 3 பேரும், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 3 பேரும்  என 6 பேர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறினார். 
 

Tags : coronavirusx
ADVERTISEMENT
ADVERTISEMENT