சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.35.50 லட்சம் மதிப்பிலான 706 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபையில் இருந்து வியாழக்கிழமை சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, சுங்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், இரண்டு பயணிகளிடம் இருந்து 706 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ. 35.50 லட்சம் ஆகும்.
சுங்கத்துறை அதிகாரிகள், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.