லட்சத்தீவுகளின் நிர்வாகத் தலைவர் தினேஷ்வர் சர்மா வெள்ளிக்கிழமை காலமானார்.
பிகாரைச் சேர்ந்த தினேஷ்வர் சர்மா (வயது 66). 1976ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் தேர்வான இவர், புலனாய்வுத் துறையின் இயக்குநர் உள்பட பல முக்கிய பணிகளில் பணிபுரிந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, 2019 நவம்பர் 3ஆம் தேதி லட்சத்தீவுகளின் நிர்வாகத் தலைவராக நியமிக்கப்பட்ட இவர் வெள்ளிக்கிழமை காலமானார்.
இவரது மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.