உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவைக் கூட்டம் வருகின்ற டிசம்பர் 21ஆம் தேதி கூடுகிறது என சட்டப்பேரவை செயலர் வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
கரோனா காரணமாக நாடு முழுவதும் உள்ள மாநிலங்களின் சட்டப்பேரவைகள் தாமதமாக நடந்து வருகின்றது.
இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தின் சட்டப்பேரவைக் கூட்டம் டிசம்பர் 21ஆம் தேதி காலை 11 மணிக்கு கூடும் என சட்டப்பேரவை செயலர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டம், இந்தாண்டின் 3வது சட்டப்பேரவைக் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.