சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 10 நீதிபதிகள் நாளை(வியாழக்கிழமை) பதவியேற்கவுள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக இருந்த நீதிபதிகள் பரிந்துரைப் பட்டியலுக்கு குடியரசுத் தலைவர் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தார்.
அதன்படி, கண்ணம்மாள், சண்முகசுந்திரம், சாந்திகுமார், முரளி சங்கர், மஞ்சுளா ராமராஜு, தமிழ்ச்செல்வி, சந்திரசேகரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், நக்கீரன் மற்றும் ஆனந்தி சுப்பிரமணியம் ஆகிய 10 பேர் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவருக்கும் நாளை சென்னை உயர்நீதிமன்றத்தின் அரங்கத்தில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளர் என உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் தெரிவித்துள்ளார்.