புரெவி புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்பதால் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் இன்று இரவு இலங்கையில் கரையைக் கடந்து டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை குமரி - பாம்பன் இடையே கரையைக் கடக்க உள்ளது.
இதனால் தென் தமிழக மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ரஜ் ஆலிவர் வெளியிட்ட செய்தியில்,
புரெவி புயல் கரையைக் கடக்க உள்ளதால் ராமநாதபுரம் மக்கள் டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.