சென்னை கோயம்பேட்டில் நிறுத்தப்பட்டிருந்த 5 ஆம்னி பேருந்துகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 ஆம்னி பேருந்துகள் தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
தகவல் அறிந்து 6 தீயணைப்பு வாகனங்களுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
தீ விபத்துக்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.