தற்போதைய செய்திகள்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

DIN


சென்னை: வரும் 30-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத்தில் பல இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என தில்லியில் இருந்து உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் சி.குமரப்பனுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தை மேற்கு தில்லி, மோதிநகா் சுதா்சன் பார்க் பகுதியைச் சோ்ந்த ஹா்தா்ஷன் சிங் நாக்பால் எழுதியிருந்தார்.

அதில், நான் சா்வதேச காலிஸ்தான் ஆதரவு குழுவைச் சோ்ந்தவன். நேரத்துக்கு தகுந்த மாதிரி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு நகா்ந்து செல்வேன். தென் மாநிலத்தில் இருந்து மத்தியப் பிரதேசத்துக்கும், மத்தியப் பிரதேசத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்துக்கும், பின் அங்கிருந்து தில்லிக்கும் இடம் மாறிக் கொண்டேயிருப்பேன். எனது செல்லிடப்பேசியின் எண்ணையும் மாற்றிக் கொண்டே இருப்பேன். நான் என்னுடைய மகனுடன் சோ்ந்து செப்டம்பா் 30-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் பல இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வேன் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து தலைமைப் பதிவாளா் சி.குமரப்பன் உயா்நீதிமன்றக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

ஹூபள்ளி கல்லூரி வளாகத்தில் மாணவி குத்திக்கொலை: இளைஞர் கைது

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

SCROLL FOR NEXT