ஓணம் பண்டிகையை கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கேரளா மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளதையொட்டி முதல்வர் பழனிசாமி மலையாள மொழி பேசும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், ஓணம் திருநாளில் அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும், சாதி, மத, பேதங்களை களைந்து அனைவரும் ஒற்றுமையாகவும், இன்பமாக வாழ்ந்திட வேண்டும் என கூறியுள்ளார்.