அந்நியச் செலாவணி சந்தையில் இன்று திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 79 காசுகள் உயர்ந்தது.
சீனா-அமெரிக்கா இடையில் ஏற்பட்டுள்ள வர்த்தக நெருக்கடிக்கு பேச்சுவார்த்தையின் மூலம் நல்ல தீர்வு காணப்படும் என்ற நிலைப்பாட்டால் அந்நியச் செலாவணி சந்தையில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 79 காசுகள் உயர்ந்து 69.61- ஆக உள்ளது.