சென்னை: திருச்சியில் தியாகராஜ பாகதவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் இன்று சனிக்கிழமை முதல்வர் பழனிசாமி அறிவித்த அறிக்கையில், தியாகராஜ பாகவதரின் கலையுலக வாழ்வு 1934-ஆம் ஆண்டு பவளக்கொடி திரைப்படத்தின் மூலம் அரங்கேறியது. அவா் நடித்த ஹரிதாஸ் திரைப்படம் பெரும் வரவேற்பு பெற்றது. அவரது சங்கீத பாடல்கள் அன்றும், இன்றும் மக்கள் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அவா் பல வெற்றிப் படங்களை வழங்கி தனக்கென தனி முத்திரை பதித்தவா்.
அவரது சாதனைகளை அங்கீகரிக்கும் வகையிலும், அவரின் நினைவைப் போற்றவும் திருச்சி மாவட்டத்தில் ரூ.50 லட்சத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார்.