சென்னை விமான நிலையத்தில் ரூ.12.60 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.12.260 லட்சம் மதிப்பு வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை
சென்னை விமான நிலையத்தில் ரூ.12.60 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்


சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.12.260 லட்சம் மதிப்பு வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். 

சென்னையில் துபாய்க்கு வெளிநாட்டு கரன்சிகள் கடத்தப்பட உள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது துபாய் செல்லவிருந்த நாகூரை சேர்ந்த இனாயத்துல்லா என்பவரின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.  

அதில் ரூ.12.60 லட்சம் மதிப்புள்ள சவூதி மற்றும் துபாய் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளை கடத்த முயன்றது தெரியவந்தது. 

இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரிடம் ஹவாலா பணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com