சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.12.260 லட்சம் மதிப்பு வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
சென்னையில் துபாய்க்கு வெளிநாட்டு கரன்சிகள் கடத்தப்பட உள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது துபாய் செல்லவிருந்த நாகூரை சேர்ந்த இனாயத்துல்லா என்பவரின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் ரூ.12.60 லட்சம் மதிப்புள்ள சவூதி மற்றும் துபாய் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகளை கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரிடம் ஹவாலா பணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.