கடந்த சில வாரங்களாக பருவமழை தீவிரமாக பெய்துவரும் சூழலில் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 855 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது.
கபினி அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடியும், கேஆர்எஸ் அணையிலிருந்து 355 கனஅடியும் நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியதையடுத்து முதல்வர் குமாரசாமி உத்தரவின்படி காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனிடையோ, கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் நாளை முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்ற அறிவிப்பால் மஞ்சள் நிற அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.