சென்னை: முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தால் தமிழகத்திற்கு முதலீடா? அல்லது அவருக்கு முதலீடா? என தெரியவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நடந்த திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதனை தொடர்ந்து அவர் பேசுகையில், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியாற்றுவதே திமுகவின் நோக்கம். மக்கள் பணியில் இருந்து பின்வாங்க மாட்டோம்.
சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது தவறு என தில்லியில் போராடவில்லை, கையாண்ட விதம் தவறு, முறையாக அமல்படுத்தவில்லை என்பதை சுட்டிக்காட்டி போராடினோம்.
யாருக்கு முதலீடு?: முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தால் தமிழகத்திற்கு முதலீடா? அல்லது அவருக்கு முதலீடா? என தெரியவில்லை என கூறினார்.