முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை செலுத்தினார்.
சுதந்திர போராட்ட வீரரும் நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவருமான லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாள் இன்று.
இதையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தில்லி விஜய்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையும் படிக்க | பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடிய 138 பேர் மீது வழக்குப் பதிவு
அதைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரும் லால் பகதூர் சாஸ்திரியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் அரசு சார்பில் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.