புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவின்போது பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் எம்.பி. விடுத்த கோரிக்கைக்கு பிரதமா் மோடி பதிலளித்தாா்.
புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் தமிழக செங்கோல் நிறுவப்பட்டதுபோன்று மாநிலங்களவையிலும் நிறுவ வேண்டும் என பிரதமா் மோடியிடம் அன்புமணி கோரிக்கை விடுத்தாா்.
இதற்கு பதிலளித்த பிரதமா், இதுகுறித்து மாநிலங்களவையில் கோரிக்கை வையுங்கள் என்றாா்.
அன்புமணி மாநிலங்களவை உறுப்பினா் என்பது குறிப்பிடத்தக்கது.