கௌகாத்தி (அஸ்ஸாம்): அஸ்ஸாமின் கௌகாத்தியில் உள்ள ஜலுக்பாரி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் ஏழு மாணவர்கள் பலியாகினர், 6 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அஸ்ஸாமின் அசாரா பகுதியில் இருந்து வேகமாக வந்த கார் டிவைடரைக் கடந்து எதிரே வந்த சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காரில் இருந்த 7 பேர் பலியாகினர். சரக்கு வாகனத்தில் இருந்த 3 பேர் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.
விபத்தில் பலியானவர்கள் அனைவரும் அஸ்ஸாம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என்றும், காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.