இந்தியா

மைசூரு அருகே கார்-வேன் மோதல்: 10 பேர் பலி; நிவாரணம் அறிவிப்பு

DIN

கர்நாடகத்தில் மைசூரு அருகே காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 

கர்நாடக மாநிலம் மைசூரு அருகே திருமாகுடலு - நரசிபுரா பகுதியில் ஒரு இன்னோவோ காரும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். இதில் குழந்தைகள் 2 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

மேலும் விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT