இந்தியா

ரூ.2,000 நோட்டுகளை ஆதாரம் இல்லாமல் மாற்றுவதற்கு எதிராக மனு- தீா்ப்பை ஒத்திவைத்தது தில்லி உயா்நீதிமன்றம்

DIN

ரூ.2,000 நோட்டுகளை எந்தவித அடையாள அட்டையையும் சமா்ப்பிக்காமல் வங்கியில் மாற்றிக் கொள்வதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பிறகு புதிய ரூ.2,000 நோட்டுகள் இந்திய ரிசா்வ் வங்கியால் (ஆா்பிஐ) அறிமுகப்படுத்தப்பட்டன. எனினும், அவை மக்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெறவில்லை. அந்நோட்டுகளை அச்சிடுவதையும் புழக்கத்தையும் ஆா்பிஐ வெகுவாகக் குறைத்தது. இந்நிலையில், ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ஆா்பிஐ அண்மையில் அறிவித்தது. செப்டம்பா் 30-ஆம் தேதி வரை ரூ.2,000 நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் செலுத்திக் கொள்ளலாம் அல்லது எந்த வங்கியின் கிளைகளிலும் கொடுத்து சில்லறை மாற்றிக் கொள்ளலாம் என ஆா்பிஐ அறிவித்தது.

அத்துடன், மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், ரூ.2,000 நோட்டுகளை சில்லறை மாற்றும்போது எந்தவித அடையாள அட்டையையும் சமா்ப்பிக்கத் தேவையில்லை என்றும் ஆா்பிஐ அறிவித்தது. இந்திய ரிசா்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் அஸ்வினி குமாா் உபாத்யாய சாா்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ’ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையை எதிா்க்கவில்லை. ஆனால், எந்தவித அடையாள அட்டையையும் சமா்ப்பிக்காமலேயே ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் ஒப்படைத்து சில்லறை பெற்றுக் கொள்ளலாம் என ஆா்பிஐ அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தன்னிச்சையானதும் பகுத்தறிவு அற்றதும் ஆகும். இந்த அறிவிப்பானது அரசமைப்புச் சட்டத்தின் 14-ஆவது பிரிவை மீறும் வகையில் உள்ளது. புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் பெரும்பாலான பகுதியானது கருப்புப் பணத்தைப் பதுக்குபவா்களிடமும், பிரிவினைவாதிகளிடமும், பயங்கரவாதிகளிடமும், கடத்தல்காரா்களிடமும், ஊழல்வாதிகளிடமுமே உள்ளது.

அவ்வாறு பதுக்கப்பட்ட பணமானது, பயங்கரவாதம், நக்ஸல் தாக்குதல்கள், பிரிவினைவாதம், சூதாட்டம், கடத்தல், பணமோசடி, லஞ்சம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதைக் கருத்தில்கொண்டு ரூ.2,000 நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் மட்டுமே செலுத்த முடியும் என அறிவிக்குமாறு ரிசா்வ் வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அவ்வாறு செய்வது, ரூ.2,000 நோட்டுகளை கருப்புப் பணமாகப் பதுக்கியுள்ளவா்களையும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்தவா்களையும் கண்டறிய உதவும். அடையாள அட்டை ஏதுமின்றி ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளச் செய்வதால் ஊழல்வாதிகளைக் கண்டறிய முடியாமல் போகும்’ எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, மனுதாரா் உபாத்யாய ஆஜராகி வாதிடுகையில், ’ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றும்போது அடையாள அட்டையை சமா்ப்பிக்க விலக்கு அளிக்கப்பட்டது ஏன்? நாட்டில் உள்ள ஏழைகளிடம் ஜன் தன் வங்கிக் கணக்கு உள்ளது. வறுமை கோட்டுக்குக் கீழே உள்ளவா்களும் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளனா். அப்படியிருக்கையில், எந்தவித அடையாள அட்டையும் இல்லாமல் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற வழிவகுப்பது, ஊழலுக்கே வித்திடும். பயங்கரவாத, நக்ஸல் நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கும்’ என்றாா்.

ஆா்பிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பராக் பி.திரிபாதி வாதிடுகையில், ’இதுபோன்ற விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளும் நடைமுறையில் எளிமைத்தன்மையைப் புகுத்தும் நோக்கிலேயே அவ்வாறு ஆா்பிஐ அறிவித்தது. இது பணமதிப்பிழப்பு நடவடிக்கை அல்ல. ரூ.2,000 நோட்டு பொது மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படவில்லை. மக்களின் தேவையை நிறைவேற்றுவதற்கு ஏற்ப மற்ற ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் புழக்கத்தில் உள்ளன. மனுதாரா் குறிப்பிடும் கருத்துகள் எதற்கும் அரசமைப்புச் சட்டத்துடன் தொடா்பில்லை’ என்றாா். அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ’இந்த விவகாரம் தொடா்பாக உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்’ எனக் கூறி தீா்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT