சண்டீகரில் இந்திய விமானப் படையின் பாரம்பரிய மையத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை திறந்துவைத்தார்.
கடந்தாண்டு சண்டிகர் யூனியன் பிரதேசத்திற்கும் இந்திய விமானப்படைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் இந்த மையம் அமைக்கப்பட்டது.
பஞ்சாப் ஆளுநரும், சண்டிகர் நிர்வாகியுமான பன்வாரிலால் புரோகித், விமானப்படை தளபதி விஆர் சௌதாரி மற்றும் எம்பி கிரோன் கெர் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.