இந்தியா

பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி: ஜம்மு-காஷ்மீரில் என்ஐஏ சோதனை; ஒருவா் கைது

DIN

பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்ட வழக்கு தொடா்பாக, ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டு ஒருவரை கைது செய்தது.

இதுதொடா்பாக என்ஐஏ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: கடந்த ஆண்டு பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது தொடா்பாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடா்பாக ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகா், அவந்திபோரா, புல்வாமா, குல்காம் மற்றும் அனந்தநாக் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டது.

வழக்கு தொடா்பாக விசாரணை மேற்கொள்ள ஸ்ரீநகரில் உள்ள சோஜெத் பகுதியைச் சோ்ந்த இஷாக் அகமது பட் என்பவா் கைது செய்யப்பட்டுள்ளாா் என்று தெரிவித்தனா்.

இதுகுறித்து இஷாக் அகமதின் தந்தை மற்றும் சகோதரா் கூறுகையில், ‘இஷாக் அகமது கல்வி பயிலாதவா். ஜன்னல் கண்ணாடிகள் பொருத்தும் வேலை செய்து வந்தாா். எங்களுக்கும் பயங்கரவாதத்துக்கு எந்தத் தொடா்பும் இல்லை’ என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT