மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே விளையாட்டுத் திடலில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றது.
மும்பை வான்கடே விளையாட்டுத் திடலில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தை நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்டு மகிழ்ந்தார். மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் கலேவும் ரஜினியும் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டே உரையாடும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகின.
இதையும் படிக்க- தங்கம் விலை அதிரடி உயர்வு: எவ்வளவு தெரியுமா?
இதைத்தொடர்ந்து மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்தார். அப்போது உத்தவ் தாக்கரே குடும்பத்தினர் ரஜினிகாந்துக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து ரஜினியுடன் உத்தவ் தாக்கரே குடும்பத்தினர் புகைப்பபடமும் எடுத்துக்கொண்டனர்.
இருப்பினும் இந்த சந்திப்பிற்கான காரணம் குறித்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.