காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு முதிர்ச்சியற்ற தலைவர் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் கூறியுள்ளார்.
மாநில தலைநகர் போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய சௌகான் கூறுகையில்,
ராகுல் காந்தி இன்னும் முதிர்ச்சியடையவில்லை. அவரது மனநிலை குழந்தைகளைப் போன்றது. எனவே அவர் முதிர்ச்சியடையாதவர். ஆனால், இந்த முதிர்ச்சியற்ற தலைவரைக் கட்டாயப்படுத்தி தேசியத் தலைவராக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
பிரதமர் மோடியை எதிர்க்கமுடியவில்லை. அதனால் நாட்டையே எதிர்க்கிறார் ராகுல்காந்தி, நாட்டைப் பற்றி வெளியில் பேசுவது தேசத்துரோகத்தின் எல்லைக்குள் வருமா? இதுதான் உங்களில் தேசபக்தியா? என்று சரமாரியாகத் தாக்கியுள்ளார்.