இந்தியா

நாட்டாவின் வீட்டிற்கு முன்பு காங்கிரஸ் மகளிர் பிரிவினர் ஆர்ப்பாட்டம்: 15 பேர் கைது!

DIN

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவின் வீட்டிற்கு முன்பாக காங்கிரஸ் மகளிர் பிரிவினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மக்களவையில் ராகுல் காந்திக்கு எதிராக இழிவான கருத்துகள் கூறியதைக் கண்டித்து, ஜெ.பி.நட்டாவின் வீட்டிற்கு முன்பாக தில்லியின் மகிளா காங்கிரஸ் கட்சியின்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மகிளா காங்கிரஸ் கட்சியின் தலைவர் அம்ரிதா தவான் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

முன்னதாக ராகுல் காந்தி வெளிநாட்டுப் பயணத்தின்போது இந்தியாவை அவதூறாகப் பேசியதாக பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்த நிலையில், மக்களவையில் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் ஜெ.பி.நட்டா தொடர் சர்ச்சையை ஏற்படுத்தினார். 

இந்நிலையில், ஜெ.பி.நட்டாவின் வீட்டிற்கு முன்பாக மகளிர் காங்கிரஸ்  பிரிவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

SCROLL FOR NEXT