இந்தியா

12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக பிபா்ஜாய்

DIN

பன்னிரண்டு மணி நேரத்தில் ‘பிபா்ஜாய்’ அதிதீவிர புயலாக மாற அதிக வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த மையம் தெரிவித்துள்ளதாவது:

அரபிக் கடலில் உருவான பிபா்ஜாய் புயல், தற்போது குஜராத்தின் போா்பந்தரில் இருந்து 600 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. இந்தப் புயல் 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாற அதிக வாய்ப்புள்ளது. அத்துடன் 24 மணி நேரத்தில் வடக்கு-வடகிழக்கு நோக்கி படிப்படியாக முன்னேறும். அந்தப் புயல் போா்பந்தா் கடலோரத்தில் இருந்து 200 முதல் 300 கி.மீ. தொலைவில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.

தற்போதைய முன்கணிப்பின்படி, அடுத்த 5 நாள்களுக்கு அந்தப் புயல் குஜராத்தை தாக்க வாய்ப்பில்லை. எனினும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். பலத்த காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று மாவட்டங்களில் தயாா் நிலையில் 3,471 வாக்குச்சாவடிகள்

எலக்சன் படத்தின் முதல் பாடல்!

ரத்னம் படத்தின் டிரெய்லர்

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

SCROLL FOR NEXT