இந்தியா

வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும் மோடி அரசு புது அர்த்தம் கொடுத்துள்ளது: தர்மேந்திர பிரதான்

DIN

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் புதிய அர்த்தம் கொடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்து 9  ஆண்டுகள் நிறைவுபெற்றதை கொண்டாடும் விதமாக ஒடிசாவின் தியோகரில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

அப்போது அவர் பேசியதாவது: மத்திய அரசின் நலத் திட்டங்களால் ஒடிசா அதிக அளவில் பயனடைந்துள்ளது. நலத்திட்டங்கள் மூலம் தியோகரில் உள்ள பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவிலான பயனை அடைந்துள்ளனர் என்றார்.

பிரதமர் மோடி  தலைமையிலான ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவுபெற்றதை கொண்டாடும் விதமாக நாட்டின் பல மாநிலங்களிலும் இது போன்ற விழாக்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊருணியில் மூழ்கி மாணவா் பலி

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

கொட்டாரம் அருகே தொழிலாளி தற்கொலை

விளாத்திகுளத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் குறைப்பு -பயணிகள் தவிப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT