நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்காக பாஜக உழைத்து வருவதாக அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
ஆந்திரத்தில் உள்ள பாஜக தலைவர்களுடன் வெங்கடேஸ்வரா கோயிலுக்கு சென்று திரும்பிய அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: பிரச்னைக்கு தீர்வு கிடைத்தால்தான் ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்துகொள்வோம்: சாக்ஷி மாலிக்
அப்போது பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: நாங்கள் நாட்டின் முன்னேற்றத்துக்காவும், வளர்ச்சிக்காகவும் உழைத்து வருகிறோம். எங்களது நோக்கங்கள் வெற்றியடைய கடவுள் வெங்கடேஷ்வராவின் அருளை பணிவோடு பெற்று வந்தேன் என்றார்.
பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா நேற்று இரவு ஆந்திரம் வந்தடைந்தார். அவர் சித்தூர் தொகுதியில் பாஜக தலைவர்களை சந்திக்க உள்ளார். அதன்பின் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேச உள்ளார்.