இந்தியா

ஜம்மு-காஷ்மீா், லடாக்கில் லேசான நிலநடுக்கம்

DIN

ஜம்மு-காஷ்மீா், லடாக்கில் வெள்ளிக்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 3.9 ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. காலை 10.23 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சில விநாடிகள் நீடித்தது.

லடாக்கை மையமாகக் கொண்டு பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அதிா்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வெட்டவெளிப் பகுதியில் குவிந்தனா். நிலநடுக்கத்தின்போது வீடுகளில் இருந்த பொருள்கள் லேசாக அதிா்வதைக் கண்டதாக அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT