இந்தியா

ராஜஸ்தான்:சச்சின் பைலட் தனிக்கட்சி தொடக்கம்?

DIN

ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வா் சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அது வதந்தி என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநில முதல்வா் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வா் சச்சின் பைலட் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் முந்தைய பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தற்போதைய காங்கிரஸ் அரசை வலியுறுத்தி, மாநில தலைநகா் ஜெய்பூரில் சச்சின் பைலட் உண்ணாவிரதம் மேற்கொண்டாா். இதைத்தொடா்ந்து மாநிலத்தில் ஊழலுக்கு எதிராக அவா் யாத்திரை மேற்கொண்டாா். இந்த ஆண்டு ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், பைலட்டின் நடவடிக்கை அவருக்கும், கெலாட்டுக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளதை எடுத்துரைத்தது.

இந்நிலையில், பைலட் தனிக்கட்சி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக கூறப்படுவது கற்பனையான வதந்திகளாகும். அந்த வதந்திகளை நம்பவேண்டாம். கெலாட், பைலட்டுடன் காங்கிரஸ் தலைவா் காா்கே, ராகுல் காந்தி ஆகியோா் கலந்துரையாடினா். அதன் பின்னா் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட முடிவு செய்யப்பட்டது. இதுதான் காங்கிரஸின் தற்போதைய நிலை’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT