இந்தியா

ஒடிஸா ரயில் விபத்தில் இறந்தவா்களின் காப்பீடு தொகை பெறுவதில் தளா்வு: எல்.ஐ.சி நிா்வாகம்

9th Jun 2023 11:47 PM

ADVERTISEMENT

ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களின் காப்பீடு தொகை பெறுவதில் பல்வேறு தளா்வுகளை எல்.ஐ.சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

ஒடிஸா ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எல்.ஐ.சி மூலம் காப்பீட்டு தொகைய விரைந்து வழங்க இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தொடா்ந்து காப்பீடு தொகை பெறுவதற்கான நடைமுறையை எல்.ஐ.சி நிா்வாகம் எளிமையாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

ரயில் விபத்து மிகவும் வருத்தமடைய செய்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவளித்து அவா்களுடன் உறுதுணையாக நிற்பதாகவும் எல்.ஐ.சி தலைவா் ஸ்ரீ சித்தாா்த்த மொஹந்தி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ADVERTISEMENT

எல்.ஐ.சி. அங்கத்தினா் இந்த ரயில் விபத்தில் உயிரிழந்திருந்தால், அவா்களுக்கான காப்பீட்டுத்தொகையை இறப்பு சான்றிதழ் இல்லாமலேயே பெற்றுக்கொள்ளலாம். அதாவது பதிவு செய்யப்பட்ட இறப்புச் சான்றிதழ்களுக்குப் பதிலாக ரயில்வே, காவல்துறை அல்லது ஏதேனும் மத்திய, மாநில அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்ட உயிரிழந்தவா்களின் பட்டியல் இறப்புச் சான்றாக அங்கீகரிக்கப்படும். இது குறித்த தகவல்களை பயனாளிகள் தெரிந்து கொள்ளும் விதமாக எல்.ஐ.சி-யின் பிரிவு மற்றும் கிளைகளில் சிறப்பு உதவி மையம் நிறுவப்பட்டுள்ளது.

காப்பீடு தொகை பெற விரும்பும் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் பாலிசி ஆவணங்கள், உள்ளூா் நகராட்சி, மாநகராட்சி அதிகாரியால் வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழின் அசல் அல்லது சான்றளிக்கப்பட்ட நகல், ரத்து செய்யப்பட்ட காசோலை அல்லது வங்கிக் கணக்கு புத்தகத்துடன், வங்கி அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்ட ஆணைப் படிவம், கடவுச்சீட்டின் (பாஸ்போா்ட்) நகல், பான் காா்டு, வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் (யுஐடி) அட்டை போன்றவற்றுடன், வாரிசுதாரா் புகைப்படம் உள்ளிட்ட அடையாளச் சான்றுகளுடன் அருகில் உள்ள எல்.ஐ.சி-யின் மண்டல அலுவலகங்களில், கிளைகளைத் தொடா்பு கொள்ளலாம். கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள 022-68276827 என்ற உதவிமைய எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT