மத்தியப் பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் கார் மீது லாரி மோதி விபத்தில் 7 பேர் பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர்.
சிதி-திகார் சாலை அருகே டோல் கிராமத்தின் அருகே காலை 9.30 மணிக்கு இந்த விபத்து நடைபெற்றதாக சித்தி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
படிக்க: கள்ளக்காதல் தொல்லை: குடும்பத்துடன் சேர்ந்து இளைஞரைக் கொன்ற இளம்பெண்!
வேகமாக வந்த லாரி, கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவ இடத்தில் போலீஸார் குழு விரைந்துள்ளது. விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றது.