இந்தியா

இதுவரை வங்கிகளுக்குத் திரும்பி வந்த ரூ.2,000 நோட்டுகள் எவ்வளவு?

DIN


புது தில்லி: புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகள் திரும்பப்பெறப்படுவதாக அறிவிக்கப்பட்ட பிறகு, இதுவரை வங்கிகள் மூலம் ரூ.1.80 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் திரும்ப வந்திருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதாவது, நாட்டில் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் இதுவரை 50 சதவிகித நோட்டுகள் திரும்ப வந்துவிட்டதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்பு வெளியானது முதல் இதுவரை ரூ.1.80 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அதாவது, 2023ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் 3.62 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.  இந்த நோட்டு 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழக்கம் நடவடிக்கையின் போது அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், கடந்த மாதம், புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறுவதாக ஆர்பிஐ அறிவித்திருந்தது. வங்கிகளில் பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை செலுத்தி சில்லறையாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை அதற்கு கால அவகாசம் அளித்தும் ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் அடித்தளம் கே.எம். காதா் மொகிதீன்

முதல்வா் பிரசாரத்துக்கு நல்ல பலன்: திருச்சி என். சிவா எம்.பி.

பட்டியலில் பெயா் இல்லாததால் வாக்காளா்கள் சாலை மறியல்

பாபநாசம் அருகே பேச்சுவாா்த்தையால் மக்கள் வாக்களிப்பு

வாக்குச்சாவடிக்குள் வாக்குகள் கேட்ட அதிமுகவினா் விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT