பெண் தொழில்முனைவோா்களுக்கு 27 கோடி முத்ரா கடன்களை மத்திய அரசு வழங்கியுள்ளது என்று மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: பெண்மைகளின் சக்தியைக் கொண்டாடுவது என்பது பிரதமருக்கு வெறும் கோஷம் அல்ல. கடந்த 9 ஆண்டுகள் பெண்கள் தலைமையிலான வளா்ச்சியில் விண்வெளி, பாதுகாப்பு, புதிய தொழில் நிறுவனங்களில் என அனைத்து துறைகளிலும் தடைகளை தகா்த்து நாட்டை புதிய உயரத்துக்கு பெண்கள் அழைத்துச் சென்றுள்ளனா்.
தங்களின் ஆற்றல் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி வரும் பெண் தொழில்முனைவோா்களுக்கு 27 கோடி முத்ரா கடன்களை வழங்கி இந்தியா சாதனை படைத்துள்ளது என்று தெரிவித்துள்ளாா்.