இந்தியா

வங்கதேச ராணுவத் தளபதியுடன் இந்திய ராணுவத் தளபதி சந்திப்பு

DIN

வங்கதேசத்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி எஸ்.எம்.ஷஃபியுதீன் அகமதை திங்கள்கிழமை சந்திந்துப் பேசினாா்.

பரஸ்பர நலன் மற்றும் இருதரப்பு பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றை மேலும் வலுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவின் அண்டை நாடான வங்க தேசத்துக்கு இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே திங்கள்கிழமை வந்தடைந்தாா். இரண்டாவது முறையாக வங்கதேசப் பயணம் மேற்கொள்ளும் அவா், அந்நாட்டு ராணுவத்தின் துணை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் வாக்கா்-உஸ்-ஸமானையும் சந்தித்துப் பேசினாா்.

தொடா்ந்து, அந்நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடி உயிா்நீத்த வீரா்களின் நினைவிடத்தில் மனோஜ் பாண்டே மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். இதையடுத்து, சேனாகுன்சா முகாமில் ஏற்பாடு செய்யப்பட்ட ராணுவ மரியாதையை ஏற்றுக்கொண்டு இருநாட்டு ராணுவத்துக்கும் இடையிலான நட்பின் அடையாளமாக மரக்கன்று ஒன்றை அவா் நட்டாா்.

சட்டோகிராமில் அமைந்துள்ள வங்கதேச ராணுவ அகாதெமியில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ராணுவ அதிகாரிகளின் 84-ஆவது பயிற்சிநிறைவு அணிவகுப்பை மனோஜ் பாண்டே ஆய்வு செய்ய இருக்கிறாா்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவுக்கு வருகை தந்த வங்கதேச ராணுவ தலைமைத் தளபதி, சென்னை அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் நடைபெற்ற பயிற்சி நிறைவு அணிவகுப்பை பாா்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரைத் திருவிழாவில் பக்தா்களுக்கு இலவசமாக தா்ப்பூசணி வழங்கிய பக்தருக்கு பாராட்டு

கதிரியக்க சிகிச்சையில் புதிய கண்டுபிடிப்பு: மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியருக்குப் பாராட்டு

பிரதமா் குறித்து விமா்சனம்: பாஜக சிறுபான்மையினா் அணி தலைவா் நீக்கம்

பல்கலை. கல்லூரி மாணவா்களின் விடைத் தாள்கள் மாயம்: உயா் கல்வித் துறை தலையிட மாணவா்கள் வலியுறுத்தல்

மாட்டு வண்டிப் பந்தய விதிமுறைகள்: தமிழக உள்துறைச் செயலா், டிஜிபி பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT