இந்தியா

கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் குண்டு இருப்பதாகப் புரளி: அதிகாரிகள் சோதனை!

DIN

கொல்கத்தாவின் என்.எஸ்.சி போஸ் சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த புரளியை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

லண்டனுக்கு செல்லும் கத்தார் ஏர்வேஸ் விமானம் 541 பயணிகளுடன் இன்று அதிகாலை 3.29 மணிக்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்த பயணி ஒருவர் வெடிகுண்டு இருப்பதாக கூச்சலிட்டார். இதையடுத்து, விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். 

விமானக் குழுவினர் உடனடியாக மத்திய பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். ஆனால் விமானத்தில் எந்தவித பொருளும் கிடைக்கவில்லை. 

இதன்பின்னர், கூச்சலிட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT