இந்தியா

மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டையை வழங்குகிறதா மேற்கு வங்கம்?

DIN

புதுதில்லி: நாடு முழுவதும் வழங்கப்பட்ட 94 லட்சம் மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகளில், மேற்கு வங்கத்திலிருந்து இதுவரை ஒன்பது அட்டை மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின் மூலம் வழங்கப்படும் சலுகைகளைப் பெற ஊனமுற்றோர் அடையாள அட்டை உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் பகிர்ந்துள்ள தரவுகளின்படி, இதுவரை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 716 மாவட்டங்களில் 94.30 லட்சம் இ-யுடிஐடி கார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. 

மேற்கு வங்கத்திலிருந்து, ஒன்பது பேருக்கு மட்டுமே அடையாள அட்டை உருவாக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு அட்டைகள் வழங்க மேற்கு வங்கத்தில் தனி திட்டம் உள்ளதா என்பது குறித்து விரிவான தகவலும் இல்லை.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், அட்டைகள் வழங்கும் செயல்முறையை விரைவுபடுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT