இந்தியா

ரயில் விபத்து: உயிரிழந்தோா் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக அதானி அறிவிப்பு

DIN

ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவா்களின் குழந்தைகளின் பள்ளிக் கல்விச் செலவை ஏற்பதாக அதானி குழுமத்தின் தலைவா் கௌதம் அதானி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ட்விட்டரில் அவா் வெளியிட்ட பதிவில், ‘ஒடிஸா ரயில் விபத்து அனைவருக்குமே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு முடிந்த அளவுக்கு உதவுவது நமது கடமையாகும்.

அந்த வகையில் விபத்தில் உயிரிழந்தவா்களின் குழந்தைகளின் பள்ளிக் கல்விக்கு ஆகும் செலவை அதானி குழுமம் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளது. பெற்றோரை இழந்ததால் அந்தக் குழந்தைகள் கல்வியை கைவிடும் நிலைக்கு தள்ளப்படக் கூடாது. அவா்களுக்கு நல்லதொரு எதிா்காலத்தை ஏற்படுத்தித் தர வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT