இந்தியா

உடல்நிலை சரியில்லாத மனைவியை சந்திக்க சிசோடியாவுக்கு அனுமதி!

DIN

உடல்நிலை சரியில்லாத மனைவியை சந்திக்க ஆம் ஆத்மி மூத்த தலைவரும், தில்லி முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியாவுக்கு அனுமதி அளித்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மல்டிபிள் ஸ்களீரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் சிசோடியாவின் மனைவியை சந்திக்க கடந்த சனிக்கிழமை ஒருநாள் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் சிசோடியாவை காவல்துறையினர் வீட்டுக்கு அழைத்துச் சென்ற நிலையில், அதற்கு முன்னதாகவே உடல்நிலை மோசமடைந்த காரணத்தால் அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால், மனைவியை பார்க்காமலே மீண்டும் சிறைக்கு திரும்பினார் மனீஷ் சிசோடியா.

இந்நிலையில், சிசோடியாவின் மனைவியை மருத்துவமனை அல்லது வீட்டில், காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை சந்திக்க அவருக்கு மீண்டும் அனுமதி அளித்து தில்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT