இந்தியா

மீண்டும் ஒடிசா செல்கிறார் மம்தா பானர்ஜி!

DIN

ரயில் விபத்து நடந்த ஒடிசா மாநிலத்திற்கு மீண்டும் செல்லவுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டக் மற்றும் புவனேஸ்வர் நகரங்களுக்கு  மம்தா செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார். பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை நேரில் சென்று வழங்கவுள்ளார்.

மேலும், ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பணி நியமன கடிதங்களை புதன் கிழமை மம்தா பானர்ஜி வழங்கவுள்ளார். 

ஒடிசாவின் பாலாசோர் மாவட்டத்தில் நிகழ்ந்த மூன்று ரயில் விபத்தில் இன்று காலை வரை 151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

மேலும், ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்படும் என்று ஒடிசா மாநில அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

SCROLL FOR NEXT