இந்தியா

சத்தீஸ்கரில் குண்டு வெடிப்பு: 2 ராணுவ வீரர்கள் காயம்!

DIN

சத்தீஸ்கரின் பிஜாபூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் மத்திய ரிசர்வ படையைச் சேர்ந்த 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். 

காயமடைந்த ராணுவ வீரர்கள் முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு விமானம் மூலம் ராய்பூர் கொண்டுசெல்லப்பட்டனர். 

சிஆர்பிஎஃப் குழு புஸ்னார் முகாமில் இருந்து ஹிரோலிக்கு சென்றபோது நக்சல்கள் புதைத்துவைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவம் தக்மெட்டா மலை அருகே கங்கலூர் பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. 

இதைத் தொடர்ந்து, மாவட்ட ரிசர்வ் காவலர்(டி.ஆர்.ஜி), சம்பவம் நடைபெற்ற இடத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

SCROLL FOR NEXT