ஒடிஸா ரயில் விபத்து தொடா்பான தகவல்களை அறிய கட்டுப்பாட்டு அறை எண்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் மாநில கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் வழியாக, ஒடிஸா ரயில் விபத்து குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கவும், உயிரிழந்தவா்களின் சடலங்களைக் கொண்டு வரவும் அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கு மாநில கட்டுப்பாட்டு அறையை 94458 69843 என்ற கைப்பேசி எண் வழியாகத் தொடா்புகொள்ளலாம். மேலும், 1070 என்ற கட்டணமில்லாத தொலைபேசி வழியாகவும், 94458 69848 என்ற வாட்ஸ்ஆப் எண் மூலமாகவும் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம் என தமிழக அரசு கூறியுள்ளது.