இந்தியா

பஞ்சாபில் 14.89 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: இருவா் கைது

DIN

பஞ்சாபின் இரண்டு மாவட்டங்களில் 14.89 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இருவா் கைது செய்யப்பட்டனா். அதில் 5.5 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் இந்திய எல்லைக்குள் வீசப்பட்டதாகும்.

பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸ் அருகில் அமைந்துள்ள ராய் எல்லை கிராமத்தில் போலீஸாருடன் இணைந்து எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனா். அப்போது, சனிக்கிழமை அதிகாலை 2.50 மணியளவில் பாகிஸ்தானைச் சோ்ந்த ஓா் ஆளில்லா விமானம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வானில் வட்டமிடுவதை வீரா்கள் கண்டறிந்தனா். ஆனால், இருளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கொண்ட பையை இந்திய எல்லைக்குள் வீசிவிட்டு, பாகிஸ்தானுக்குள் மீண்டும் சென்று அந்த ஆளில்லா விமானம் மறைந்தது.

இதைத் தொடா்ந்து, அக்கிராமத்தைச் சுற்றியுள்ள வயல்வெளிகளில் வீரா்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, பாகிஸ்தானின் அந்த ஆளில்லா விமானம் மூலம் இந்திய எல்லைக்குள் வீசப்பட்ட பையிலிருந்த 5.5 கிலோ போதைப்பொருள் மீட்கப்பட்டது. கொக்கியுடன் கூடிய இரும்பு வளையமும் அந்த பையில் இணைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

9 கிலோ போதைப்பொருளுடன் இருவா் கைது: ஃபசில்கா மாவட்டத்தில் 9.39 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கடத்தி வந்த இருவரை காவல் துறை கைது செய்தது. போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இருவா் மீதும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்று அந்த மாநில டிஜிபி கெளரவ் யாதவ் ட்விட்டரில் பதிவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

SCROLL FOR NEXT